Uncategorized

இலங்கையில் நான்கில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிப்பு!

இலங்கையில் நான்கில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் இலங்கையின் பல பல்கலைக்கழகங்கள், கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சுகாதார கொள்கை நிறுவனம் ஆகியவற்றினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் முடிவிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் 23 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்றில் ஒருவருக்கு, அதாவது 31 வீதமானவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஐவரில் இருவர் (38 சதவீதம்) கண்டறியப்படாதவர்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading