இலங்கை காலி துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய கப்பல் விபத்து
காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் ஈரானிய கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையின் படகுகள் தற்போது அந்த இடத்திற்குச் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

You must be logged in to post a comment.