World

ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முதன்முதலில் பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு

மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையின் (பென்டகன்) அதிகாரபூர்வ கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி குவைத், பஹ்ரைன், கத்தார், யுஏஇ, சவுதி அரேபியா, ஈராக், ஓமான், ஜோர்டான் ஆகிய 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன.

அதுமட்டுமின்றி எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் சேதம் அடைந்து உள்ளன. அமெரிக்காவின் 12க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் அழிக்கப்பட்டு உள்ளன. சவுதி அரேபியா மற்றும் ஈராக்கில் அமெரிக்காவின் பல KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அழிக்கப்பட்டன.

ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முதன்முதலில் பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு | Iran War Has Led To Pentagon Munitions Shortfall

துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. மேலும், குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டியிருந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க படைகளின் உள்கட்டமைப்பை ஈரான் போர் எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பதைக் காட்டும் முதலாவது அதிகாரபூர்வ பென்டகன் அறிக்கை வெளியாகி இருக்கிறது.

ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முதன்முதலில் பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு | Iran War Has Led To Pentagon Munitions Shortfall

இந்த பாதிப்புகளை தொடர்ந்து, மத்திய கிழக்கில் தங்கள் ராணுவ தளங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, இடத்தை மாற்றி அமைப்பது குறித்து பென்டகன் ஆலோசித்து வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading