காசோலை மோசடி! விகாராதிபதியை கைது செய்ய உத்தரவு!!
தொழிலதிபர் ஒருவருக்கு பணம் இல்லாத காசோலையை வழங்கி மோசடி செய்த விகாராதிபதியை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பிடியாணை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
மாளிகாவத்தை ஸ்ரீ போதிராஜராம விகாரையின் விகாராதிபதி உவதென்ன சுமன தேரர் தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு தேங்காய் எண்ணெய் நிறுவனத்திடமிருந்து 60 மில்லியன் ரூபா தேங்காய் எண்ணெய்க்காக மோசடியான காசோலைகளை வழங்கிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக சந்தேக நபரான பிக்கு காவலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
2021 ஜனவரி 3 அன்று ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இவருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கினார்.

You must be logged in to post a comment.