Local

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

மட்டக்குளிய பகுதியில் நேற்று (16) பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது விபத்தில் காயங்களுக்கு உள்ளானவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு! | Horrific Accident In The Colombo Mattakkuliya Area

அவர்கள் கிராண்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தற்போது 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மட்டக்குளிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading