சீனா செயற்கை தங்கத்தை உருவாக்கியதா ? அச்சத்தில் உலக பொருளாதாரம்!!
செயற்கைத் தங்கத்தை உருவாக்கியதா சீனா? உலகப் பொருளாதார வீழ்ச்சி குறித்த அச்சம் அதிகரிப்பு!
சீன விஞ்ஞானிகள் ஆய்வக ஆராய்ச்சிகள் மூலம் தங்கத்தை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டதாக வெளியான செய்திகள், உலகளாவிய ரீதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இது சந்தை பயன்பாட்டிற்காக அதிக அளவில் தங்கத்தை உற்பத்தி செய்யும் முறை அல்ல. மாறாக, அணுக்கரு மட்டத்திலான அறிவியல் மூலம், அதீத அழுத்தங்கள் மற்றும் வெப்பநிலையில் மூலகங்களை மாற்றியமைக்கும் ஒரு கோட்பாட்டு ரீதியான முயற்சியாகும்.
தங்கம் அதன் மதிப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கு முக்கிய காரணம் அதன் ‘கிடைப்பருமை’ (Scarcity) மற்றும் மக்கள் அதன் மீது வைத்துள்ள நம்பிக்கையுமே ஆகும். தங்கம் இயற்கையில் கிடைப்பது கடினம் என்பதாலும், அதனை எளிதில் செயற்கையாகத் தயாரிக்க முடியாது என்பதாலும் அது பல நூற்றாண்டுகளாக மதிக்கப்படுகிறது.
எதிர்காலத் தொழில்நுட்பம் தங்கத்தின் இந்த கிடைப்பருமை என்ற நிலைக்கு சவால் விடக்கூடும் என்ற ஒரு சிறு எண்ணமே முதலீட்டாளர்கள், மத்திய வங்கிகள் மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்ப போதுமானது.
தற்போது வரை தங்கம் அரிய உலோகமாகவும், பொருளாதார ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகவும் நீடிக்கிறது. இருப்பினும், இத்தகைய அறிவியல் சாத்தியக்கூறுகள் பற்றிய செய்திகள் கூட சந்தை உளவியலிலும், மக்களின் நம்பிக்கையிலும் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

You must be logged in to post a comment.