Local

தனியார் துறை ஊழியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டின் 11 ஆம் எண் தேசிய குறைந்தபட்ச ஊதிய திருத்தச்சட்டத்தின்படி, தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ஜனவரி 1, 2026 முதல் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தொழில் திணைக்களத்தின் தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.என்.கே. வட்டலியத்த இதனை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 27,000 இலிருந்து ரூ. 30,000 ஆக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு | Notice Regarding Salary Increases Private Sector

அதே நேரத்தில், குறைந்தபட்ச தினசரி ஊதியமும் ரூ. 1,080 இலிருந்து ரூ. 1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இடைத்தரகர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியமர்த்தப்படும் ஊழியர்கள் தொடர்பாகவும் இந்தச் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

சட்டப்பூர்வ கொடுப்பனவுகள்

இந்த சம்பள அதிகரிப்பின்படி, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் அறக்கட்டளை நிதி, கூடுதல் நேரம், பணிக்கொடை, மகப்பேறு ஊதியம் மற்றும் விடுமுறை ஊதியம் போன்ற அனைத்து சட்டப்பூர்வ கொடுப்பனவுகளுக்கும் முதலாளிகளே பொறுப்பாவார்கள் என்று அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு | Notice Regarding Salary Increases Private Sector

இதற்கமைய, செயற்படாத முதலாளிகள் தொடர்பான முறைப்பாடுகளை தொழிலாளர் துறையின் இணையவழி முறைப்பாட்டு மேலாண்மை அமைப்பில் cms.labourdept.gov.lk வழியாகவோ அல்லது அருகிலுள்ள தொழிலாளர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாகவோ சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading