புதிய பேச்சுவார்த்தை இல்லை! ட்ரம்பின் கூற்றை முற்றாக நிராகரித்த ஈரான்
ஈரான் தடம்மாறி அமெரிக்காவிடம் நேரடிப் பேச்சுவார்த்தைக்காகக் கெஞ்சிக் கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிவரும் கூற்றுக்களை முன்னாள் ஈரானிய ராஜதந்திரியான அப்பாஸ் காமெயார் (Abbas Khameyar) முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஈரானியர்கள் தங்களை அழைத்து, கெஞ்சி, சந்திப்பைக் கேட்கிறார்கள் என்று ட்ரம்ப் பதிவிடும் ட்வீட்களும் அறிக்கைகளும் ஒரு புனையப்பட்டக் கதை.
ஆனால் இதை யாரும் நம்பவில்லை, நிலைமைகள் அவ்வாறு நகரவும் இல்லை.

சமீபத்திய வாரங்களில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள கட்டமைப்பிற்கு அப்பால் ஈரான் எந்த புதிய பேச்சுவார்த்தை முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.
புதிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதை விட, தற்போதுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே ஈரான் கவனம் செலுத்துகின்றது.
சர்வதேச உத்தரவாதங்கள் இல்லாமல் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நம்ப முடியாது என்பதில் தெஹ்ரான் உறுதியாக உள்ளது.

ஆனால் பாகிஸ்தான், கதார் அல்லது ஓமன் ஆகிய தற்போதைய மத்தியஸ்தர்கள் எவராலும் இத்தகைய உத்தரவாதத்தை வழங்க முடியாது.
ட்ரம்பின் பகிரங்க அறிவிப்புகள் பெரும்பாலும் அமெரிக்க உள்நாட்டு வாக்காளர்களைக் கவர்வதற்கும், உலகளாவிய எரிசக்தி சந்தையைக் கட்டுப்படுத்துவதற்குமான அரசியல் உத்தியே தவிர அதில் உண்மை ஏதுமில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.