Local

முறைப்பாடுகளை ஏற்கும் பணி வியாழக்கிழமையுடன் நிறைவு

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகள் ஏற்கும் காலம் எதிர்வரும் வியாழக்கிழமை நிறைவடைகிறது.

இன்று வரையில் இந்த ஆணைக்குழுவிற்கு 295 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதியில் இருந்து 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading