Local

வட்டி அற்ற மாணவர் கடன் திட்டம் – விண்ணப்ப காலம் நீடிப்பு

வட்டி அற்ற மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்ட விண்ணப்பங்களை கோரும் கால எல்லை 2025.12.15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பங்களை கோரும் கால எல்லையானது 2025.11.01 முதல் 2025.11.30 வரை மட்டுமே காணப்பட்டது.

ஆயினும் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக இந்த கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்களை கோரும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2022, 2023 அல்லது 2024 ஆம் ஆண்டுகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தமது முதலாவது அல்லது இரண்டாவது தடவையாக தோற்றிய மாணவர்கள் மற்றும் 2025 ஆம் ஆண்டிலும் மீண்டும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வட்டி அற்ற மாணவர் கடன் திட்டத்திற்காக விண்ணப்பித்தலை www.studentloans.mohe.gov.lk என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்து இணைய வழியில் (Online) மேற்கொள்ள முடியும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading