Local

மைத்திரியின் நடவடிக்கைக்கு எதிராக ஜே.வி.பியும் நீதிமன்றம் செல்கிறது – தேர்தல் ஆணையரை சந்திக்கவும் முடிவு

அரசமைப்புக்கு முரணான வகையிலேயே ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று தெரிவித்தார்.


எனவே, சட்டவிரோத நடவடிக்கைக்கு துணைபோகவேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

“ அரசமைப்பைமீறும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்லவுள்ளோம். ஜனநாயக விரோதச்செயற்பாட்டுக்கு எவரும் துணைபோகக்கூடாது. நாம் தேர்தலை எதிர்க்கடவில்லை. அது ஜனநாயக ரீதியில் நடத்தப்படவேண்டும் என்றே வலியுறுத்திவருகின்றோம்.

அரசமைப்பைமீறும் வகையிலேயே புதிய பிரதமரை ஜனாதிபதி நியமித்தார். தற்போது மீண்டுமொருமுறை நிறைவேற்று அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்தியுள்ளார்’’ என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading