Gossip

கணவனின் Whats App-ல் மனைவியின் நிர்வாண படம்; அதிர்ந்த பொலிஸார்!

மனைவியை பிரிந்து வாந்துவந்த நிலையில், இளம் கணவன் வாட்ஸ் அப்-இல் மனைவியின் நிர்வாண படத்தை வைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இந்தியாவின கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே உள்ள திருக்காக்கரை பகுதியை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கணவனின் வாட்ஸ் அப்-ல் மனைவியின் நிர்வாண படம்; அதிர்ந்த பொலிஸார்! | Naked Picture Of Wife On Husband Whatsapp Gossip

மற்றொரு ஆணுடன்   நிர்வாணமாக வீடியோ

இந்த நிலையில் அந்த வாலிபர், தனது வாட்ஸ் அப்-ல் காட்சி படமாக தன்னுடைய மனைவியின் நிர்வாண படத்தை வைத்துள்ளார். அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி,

தனது கணவரின் மீது பெரும்பாவூர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய பொலிஸார், அந்த வாலிபரின் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மனைவியின் நிர்வாண படத்தை வாட்ஸ்-அப் காட்சி படமாக வைத்தது ஏன்? என்று அந்த வாலிபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது தனது மனைவிக்கு மற்றொரு ஆணுடன் தொடர்பு உள்ளதாகவும், அந்த நபருடன் உடலில் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக வீடியோ கால் பேசியதை மறைந்திருந்து ரகசியமாக புகைப்படம் எடுத்ததாகவும் கணவன் கூறியுள்ளார்.

தனது மனைவி மீது உள்ள கோபத்தில் அதனையே தனது வாட்ஸ்-அப் காட்சிபடமாக வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிரிந்து சென்ற மனைவி மீதான கோபத்தில் அவரது நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்-அப் காட்சி படமாக வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் எர்ணாகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading