Local

அடங்காமல் அதிகரிக்கும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45.88 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,588,210 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 221,953,199 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 198,541,702 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 105,113 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22.19 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 221,953,199 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 198,541,702 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4,588,210 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 18,823,287 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 105,113 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இங்கிலாந்தில் 41,192 பேரும், அமெரிக்காவில் 39,644 பேரும், இந்தியாவில் 30,184 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ரஷ்யாவில் 790, இந்தோனேசியா 612, ஈரான் 583 பேரும் உயிரிழந்தனர்….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading