World

அமெரிக்காவிற்கு எதிராக கனடா உலக வர்த்தக அமைப்பில் புகார்

அமெரிக்கா விதித்துள்ள உலோக இறக்குமதி வரிகளுக்கு எதிராக கனடா WTO-வில் புகார் அளித்துள்ளது.

அமெரிக்கா இரும்பு மற்றும் அலுமினிய பொருட்களின் இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதித்ததையடுத்து, கனடா உலக வர்த்தக அமைப்பில் (WTO) அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மார்ச் 12 முதல் இந்த வரிகளை ஒட்டுமொத்தமாக விதித்துள்ளார்.

எந்த நாட்டுக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை, இதனால் கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், கனடா உலக வர்த்தக அமைப்பில் முறையாக முறையிட்டுள்ளது, இது அமெரிக்காவின் விதிகள் WTO விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது என தெரிவித்துள்ளது.

US Canada Tariff, World Trade Organization, Canada files compalint on US

அமெரிக்காவிற்கு அதிகளவில் இரும்பு ஏற்றுமதி செய்யும் நாடு கனடாதான், அதன் பிறகு பிரேசில் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இருக்கின்றன.

அமெரிக்காவில் உட்பயன்பாட்டுக்கு தேவையான எக்கு மற்றும் அலுமினிய பொருட்களில் பாதி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இரும்பு தொழிற்துறையை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

கனடாவின் புகார் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் WTO-வில் ஒரு சர்வதேச சர்ச்சை உருவாகும்.

இது அடுத்த கட்ட விசாரணைக்கு கொண்டு செல்லப்படும், இதன் முடிவில் அமெரிக்கா திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

இதனால் உலக வர்த்தக உறவுகளில் மாறுதல்கள் ஏற்படலாம், இது அமெரிக்கா-கனடா வர்த்தக உறவுகளை மேலும் பாதிக்கலாம்.

இந்த வர்த்தக போர், இரு நாடுகளுக்கும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று சந்தேகம் எழுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading