Lead News

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!

மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் என்று செய்திகள் வௌியாகியுள்ளன.

பிரான்ஸ் ஜனாதிபதி உடனான இரவு விருந்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் இதனை உறுதிப்டுத்தியுள்ளார்.

ஜி7 உச்சிமாநாட்டை தொடர்ந்து வெர்சாய் அரண்மனையில் மெக்ரோனுடன் இரவு உணவு அருந்தியபோது, ​​டிரம்ப் தனிப்பட்ட முறையில் ஒரு பிரதியில் கையெழுத்திட்டார் என்ற செய்தி குறித்து கேட்கப்பட்டபோது, ​​”கையெழுத்திட்டதை உறுதிப்படுத்த முடியும்,” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயியும் உறுதிப்படுத்தினார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading