இந்திய தெலுங்கானா மாநிலத்தின் முதல் முஸ்லிம் IPS அதிகாரி!
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆயிஷா பாத்திமா, தெலங்கானா மாநிலத்தின் முதல் முஸ்லிம் பெண் ஐபிஎஸ் (IPS) அதிகாரியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
2022-ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி (UPSC) அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் 184-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்த இவர், மின்பொறியியல் பட்டதாரியாவார்.
தெலங்கானா கேடருக்கு ஒதுக்கப்பட்ட இவருக்கு மாநிலத்தின் முதல் முஸ்லிம் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமை கிடைத்துள்ள நிலையில், பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

You must be logged in to post a comment.