Sports

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா!

23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (16) மோதின.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தீவிரமாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் முதல் பாதியில் சமனில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணியின் கார்டன் 55 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, அர்ஜென்டினா அணியின் என்சோ பெர்னாண்டஸ், லடாரோ மார்டினஸ் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். இதனால் போட்டியின் நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபுறம், தோல்வியடைந்த இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் அணியை சந்திக்கிறது.

உலகக் கிண்ணத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றும் இலக்குடன் அர்ஜென்டினா களமிறங்கவுள்ள நிலையில், இறுதிப்போட்டி கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading