Local

இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக IMF தெரிவிப்பு!

நிபந்தனைகளுடன் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (24) இடம்பெற்றது.

இன்று பிற்பகல் கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாக பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

ஒரு வார காலம் இலங்கையில் தங்கியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, ஊழியர்கள் மட்ட உடன்படிக்கையை எட்டுவது தொடர்பான கொள்கை அடிப்படையிலான விடயங்கள் குறித்து நீண்ட ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, பிரதமர், நிதியமைச்சு, மத்திய வங்கி உள்ளிட்ட பொருளாதார அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியதுடன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading