இலங்கையில் இப்படி ஒரு பிரதமரா?
இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய தனியாக பொருட் கொள்வனவிற்கு சென்றுள்ளார்.
சுப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு அவர் பொருள் கொள்வனவிற்கு எவ்வித பந்தாவும் இல்லாமல் செல்லும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ஒரேயொரு பாதுகாவலர் மட்டும் அவருக்கு பின்னால் செல்வதுவும் அந்த புகைப்படத்தில் உள்ளது.
முன்னைய அரசாங்கங்களின் அமைச்சர்களின் மனைவியர் மற்றும் உறவினர்கள் ஒரு கடைக்கு சென்றால் எத்தனை வாகனங்கள் மற்றும் எத்தனை பாதுகாவலர்கள் வரிசை கட்டி நிற்பார்கள். அந்த நிலையை மாற்றி இன்று பிரதமர் ஹரிணி அமரசூரிய எளிமையாக செல்வது அனைவராலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

You must be logged in to post a comment.