Local

இலங்கையில் தற்கொலை வீதம் அதிகரிப்பு!

இலங்கையில் தற்கொலை இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின்இலங்கைக்கான பிரதிநிதி அலகா சிங் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தற்கொலைகள் அதிகரித்துள்ளதன் பின்னணியில் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பொதுவான காரணிகளில் புறக்கணிப்பும் அடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு லட்சம் பேரில் 14 பேர் தற்கொலை
இலங்கையில் தற்கொலை இறப்பு விகிதம் 100,000 பேருக்கு14 என்று சுட்டிக்காட்டிய அவர், 2019 ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் இதுவே மிக அதிக எண்ணிக்கையாக இருந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நிகழ்வில் உரையாற்றிய இலங்கை உளவியலாளர்கள் கல்லூரியின் தலைவர் கபில ரணசிங்க, இலங்கையில் மனநலத்திற்காக தனியான ஒதுக்கீடுகள், வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

மனநல கல்வியறிவின் அடிப்படையில் இலங்கை மிகவும் பின்தங்கியுள்ளது. இந்தநிலையில் பாடசாலைகளில் போதுமான முறையில் கலந்துரையாடுவதற்கு கல்வி முறையில் மனநல விடயங்கள் இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading