இலங்கையில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு இலவச வீடு?
எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு தம்பதிகளும் புதிய வீட்டைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார்.
வீட்டு வசதி இல்லாததால் திருமணங்களை தள்ளிப் போட அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
சிறந்த திருமணம் வயது 24-30 வயது, அதற்குள் திருமணம் நடைபெற வேண்டும் என்றும், அந்த வயது இடைவெளிக்குள் திருமணம் நடக்கும் போது, அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது அரசின் பொறுப்பாகக் கருதப்படும் என்றும் பிரதியமைச்சர் கூறுகிறார்.
அந்த நிலைக்கு நாட்டை அபிவிருத்தி செய்ய தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தொலைக்காட்சி ஒன்றுடன் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.