Local

இலங்கையில் மூடப்படும் அபாயத்தில் ஆடை தொழிற்சாலைகள்!

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக சுமார் 200 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத் தொழிற்சாலைகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பாரிய ஆடைத் தொழிற்சாலைகள் சிபெட்கோ மற்றும் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து டொலர்களை செலுத்தி டீசலைப் பெற்றுக் கொண்டாலும் சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் வழமையான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதில் இன்று பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளன என ஆடை நிறுவன இணைத் தலைவர் பீலிக்ஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

பல சமயங்களில் போதிய டீசல் கிடைப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

யுனைடெட் கார்மென்ட் இன்ஸ்டிடியூட் ஃபோரம் கூறுகையில், இந்த ஆடைத் தொழிற்சாலைகளின் தோல்வியானது பெரிய அளவிலான தொழில்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,

ஏனெனில் பெரிய அளவிலான ஆடைத் தொழிற்சாலைகள் தங்கள் ஆடை உற்பத்தி ஆர்டர்களில் ஒரு பகுதியை சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகளுக்கு உற்பத்திக்காக வழங்குகின்றன.

இதற்கிடையில், பெட்ரோல் பற்றாக்குறையால், ஆடை தொழிற்சாலைகளின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் தனியார் வாகனங்களில் வரும் வாய்ப்பை இழந்துள்ளனர். 

இதனால், ஆடை தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையை கருத்தில் கொண்டு, தங்களது ஊழியர்களின் போக்குவரத்துக்கு பெட்ரோல் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என சிபெட்கோ நிறுவனத்திடம் ஏற்கனவே சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான ஆடைத் தொழிற்சாலைகள் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், மின் பிறப்பாக்கிகளை இயக்க வேண்டியதன் காரணமாக கூடுதல் செலவினங்களைச் சுமக்க வேண்டியிருந்தது.

அந்த நிலைமை அந்த நிறுவனங்களின் வருமானத்தை மோசமாகப் பாதித்துள்ளது. 

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் ஆர்டர்கள் வேறு நாடுகளுக்கு திரும்பும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய பீலிக்ஸ் பெர்னாண்டோ, தாம் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading