இலங்கையில் 10 இல் 9 பேர் ராஜபக்ச குடும்பத்தினரை வெறுக்கின்றனர்!

மாற்று கொள்கைக்கான மத்திய நிலையம் ஜனநாயக அரசாட்சி மீதான நம்பிக்கை தொடர்பான கணிப்பீடு ஒன்றை செய்துள்ளது.
இதில் கிடைக்கபெற்ற முடிவுகள் சில.
87% பேர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
இதன்படி 9/10 பேர் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என நினைக்கின்றனர்.
இடைக்கால அரசாங்கம், நிபுணர்கள் சபை நிர்வாகம், 20ஆம் திருத்தச் சட்டத்தின் நீக்கம் போன்ற விடயங்களை பெருமளவான மக்கள் ஆதரித்துள்ளனர்.
இன வேறுபாடுகள் இன்றி பெருமளவான மக்கள் ராஜபக்ஷகளின் ஆட்சிக்கு எதிராக உள்ளனர்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியேற வேண்டும் என்ற விடயத்துக்கு 56% பேர் ஆதரவு தெரிவிக்கின்றனர்
