இலங்கையில் 2 ஆம் கொரோனா அலை உக்ரைன் நாட்டவர்கள் மூலம் பரவியது!

கடந்த வருடம் செப்டம்பர் மாத ஆரம்பத்தில் நாட்டிற்கு வருகை தந்த உக்ரைன் விமானப் பணியாளர்களே இலங்கையில் COVID இரண்டாம் அலை பரவியதற்கான பிரதான காரணம் என சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அவர்களில் சீதுவையில் அமைந்துள்ள ஹோட்டலில் தங்கிருந்ததாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த விமானப் பணியாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் விருந்துபச்சாரம் ஒன்று நடைபெற்றுள்ளதாக வரும் அதில் வெளியிலிருந்தும் ஆட்கள் பங்கேற்றிருந்ததாகவும் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
