Local

இலங்கையில் 21 ஆவது கொரோனா மரணம் பதிவானது!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 23 ஆம் திகதி வெலிசர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. எனினும், உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட 2ஆவது பிசிஆர் பரிசோதனையின்போதே வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading