Local

இலங்கையை இரண்டு வாரங்கள் முடக்க கோரிக்கை!

இலங்கையை இரண்டு வாரங்களுக்கு மூடிவிடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹரிமக என்ற தேசிய அமைப்பின் தலைவர் நிஷாந்த குமார தசநாயக்கவினால் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

“நாட்டை முடக்கும் 2 வார காலப்பகுதியில் எரிபொருள் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கிய பின்னர் நாட்டைத் திறக்க வேண்டும்.

எரிபொருள் நெருக்கடியில், அத்தியாவசிய பொருட்களை பெற்று மக்களின் வாழ்வாதாரத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

எரிவாயு, எரிபொருள் வரிசையில் நிற்பதன் மூலம் மக்களின் உழைப்பும், செல்வமும், நேரமும் அழிக்கப்படுகின்றது.

மக்கள் 200 ரூபாய்க்கு எண்ணெய் வாங்க 1500 ரூபாய் செலவிட வேண்டும். இரண்டு வாரங்கள் நாட்டை மூடி வைத்தால் மக்களின் பணம் மிச்சமாகும்.நீங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம். 

இப்படி எண்ணெய் வரிசைகளில் நிற்காமல் அந்த நேரத்தில் வயலில் வேலை செய்வார்கள். இரண்டு வாரத்தில் எண்ணையை பெற்று நாட்டை திறந்து விடுங்கள் இந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு தீரும். தற்போது நாட்டில் அரசியல் நடத்துவதற்கு தொழிலதிபர்கள் தயாராகி வருவதைக் காணமுடிகிறது. 

2025ஆம் ஆண்டு நாட்டை கட்டியெழுப்பவோ, நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பவோ அவர்கள் வரவில்லை.அவர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடைக்கும். இவர்கள் இராஜதந்திர உதவி பெற்று வியாபாரம் செய்ய உலகின் முன் செல்ல முயற்சிக்கின்றனர். இப்படி வரும் நபர்களிடம் இந்த நாட்டை ஒப்படைக்காதீர்கள். 

இந்த நாட்டு மக்களின் பணத்தை சுரண்டி அந்த பணத்தின் பலத்துடன் வர தயாராக உள்ளவர்களை இதில் அரசியல் செய்ய அனுமதிப்பது நல்லதல்ல” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading