World

இஸ்ரேல் என்ற நாடு அழிக்கப்படும்வரை தாக்குதல்கள் தொடரும் – ஹமாஸ் சூளுரை

ஸ்ரேல் என்ற நாடு அழிக்கப்படும்வரை ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் போன்ற தாக்குதல்கள் தொடரும் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

லெபனான் செய்தி நிறுவனமான எல்பிசிஐ யிடம் ஹமாஸ் அமைப்பின் முக்கிய அதிகாரியான காசி ஹமாட் அளித்த நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்கள் நிலத்தில் இஸ்ரேலுக்கு இடமில்லை.எனவே நாங்கள் அந்த நாட்டை அகற்றவேண்டும்.

இஸ்ரேல் அழிக்கப்படும் வரை ஒக்டோபர் 7 தாக்குதலை மீண்டும் மீண்டும் செய்வோம். நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள்,நாங்கள் செய்யும் அனைத்தும் நியாயமானது என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading