World

ஈரானிய இலக்குகள் மீது தாக்க அனுமதி அளித்தது அமெரிக்கா

சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரானிய இலக்குகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கான திட்டங்களுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக பிபிசி தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் பல நாட்களுக்கு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை சிரிய எல்லைக்கு அருகில் உள்ள ஜோர்டானில் அமெரிக்க படைத்தளம் மீதான ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளன.

ஈரானிய இலக்குகள் மீது தாக்க அனுமதி அளித்தது அமெரிக்கா : உச்சகட்ட பதற்றம் | Us Approves Plan To Strike Iranian Targets

அந்தத் தாக்குதலுக்கு ஈரானின் ஆதரவு போராளிக் குழுவை அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஈரானின் புரட்சிகர காவலர் படையால் ஆயுதம், நிதி மற்றும் பயிற்சி பெற்ற பல போராளிகளைக் கொண்டதாக ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு என்ற குழு, இயங்குவதாக நம்பப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலுக்கு தாமே பொறுப்பு என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

இதற்கிடையில், டவர் 22 என அழைக்கப்படும் இராணுவ தளத்தில் 41 அமெரிக்க துருப்புக்கள் காயம் அடைந்த தாக்குதலில் தமக்கு எந்நத தொடர்பும் இல்லையென ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எனினும் நான்கு அமெரிக்க அதிகாரிகள், இந்த தளத்தை தாக்க பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானம் ஈரானால் தயாரிக்கப்பட்டது என்று அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது என்று கூறியுள்ளனர்.

ஈரானிய இலக்குகள் மீது தாக்க அனுமதி அளித்தது அமெரிக்கா : உச்சகட்ட பதற்றம் | Us Approves Plan To Strike Iranian Targets

வியாழன் அன்று ஒரு செய்தியாளர் மாநாட்டில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின், “அமெரிக்க துருப்புக்கள் மீதான தாக்குதல்களை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது” என்றார்.

“அமெரிக்கா, எங்கள் நலன்கள் மற்றும் எங்கள் மக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்,” என்று அவர் கூறினார். “நாங்கள் எங்கு தேர்வு செய்கிறோம், எப்போது தேர்வு செய்கிறோம், எப்படி தேர்வு செய்கிறோம் என்று பதிலளிப்போம்.” என மேலும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading