ஈரானுக்கு உதவ தயார்! ஹூதிப் படைகள் அறிவிப்பு!!
யேமனின் ஹூதி ஆயுதப் படையின் பாதுகாப்பு அமைச்சரான மேஜர் ஜெனரல் முகமது அல்-அதாபி (Major General Mohammed Al-Atafi), நாட்டின் உத்தியோகபூர்வ சபா (Saba) செய்தி முகமைக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பில், ஈரானின் புதிய உச்ச தலைவரான அயதுல்லா மொஜ்தபா கமேனியின் (Ayatollah Mojtaba Khamenei) எந்தவொரு உத்தரவையும் அல்லது வழிகாட்டலையும் தாராளமாகப் பின்பற்றுவதற்குத் தங்களது ஆயுதப் படைகள் முழுமையான தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
யேமன் மக்கள் மீதான பொருளாதார மற்றும் ராணுவ முற்றுகைகள் தொடர்ந்து நீடிக்குமானால், ஈரானிய உச்ச தலைவர் பிறப்பிக்கும் எந்தவொரு கட்டளையையும் களத்தில் உடனடியாகச் செயல்படுத்துவோம் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

You must be logged in to post a comment.