Local

உலக முஸ்லிம்களுக்கு ஹமாஸின் முன்னாள் தலைவர் அழைப்பு!

 

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஒக்டோபர் 13 வெள்ளிக்கிழமையன்று அதாவது இன்று இஸ்ரேலுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் போராட்டங்களை நடத்துமாறு ஹமாஸின் முன்னாள் தலைவர் காலித் மஷால் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், முன்னாள் ஹமாஸ் தலைவர் பாலஸ்தீனத்தின் அண்டை நாடுகளின் முஸ்லிம் மக்களை இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஹமாஸின் முன்னாள் தலைவர் மஷால், தற்போது கத்தாரில் செயல்பட்டு வருகிறார், ஹமாஸின் வெளிநாட்டு புலம்பெயர் அலுவலகத்திற்கு தலைமை தாங்குகிறார்.

வெளிநாட்டு ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட வீடியோவில், ஜிஹாத் கோட்பாடுகளை கற்பிக்கும் அனைத்து அறிஞர்களுக்கும் கற்பவர்களுக்கும், இது (கோட்பாடுகளை) செயல்படுத்த வேண்டிய தருணம் என்று கடுமையான அறிக்கையை வெளியிட்டார்.

ஆனால் இது இஸ்ரேலின் சொந்த திட்டத்தின்படி வெளியிடப்பட்ட அறிக்கையாக இருக்கலாம் என்றும், மத நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வன்முறை திட்டத்தை வெள்ளிக்கிழமை செயல்படுத்துவதன் மூலம் இஸ்ரேலின் வன்முறை எதிர்ப்பு விடுதலையை நியாயப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மீண்டும் போர் தொடங்கி 7 நாட்களாகியும், இரு தரப்பிலும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது காஸா பகுதியில் கடும் குடிநீர் மற்றும் உணவு தட்டுப்பாடு நிலவி வருவதுடன், மின்சாரமும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading