Local

எதிர்காலத்தில் உருவாகக் கூடிய கொரோனா பாதிப்புகளை ஏற்படுத்தும் நிபுணர்கள் எச்சரிக்கை!

கொரோனாவின் அடுத்த மாறுபாடு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று நம்புவது தவறு என்று வைராலஜிஸ்ட் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் வரும் கொரோனா மாறுபாடுகள் அதிக ஆபத்தானவை மற்றும் அதிக நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தலாம், அவை டெல்டாவை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுதொடர்பாக வார்விக் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட் பேராசிரியர் லாரன்ஸ் யங் கூறியதாவது, வைரஸ் மாறுபாடுகள் தொடர்ந்து வீரியம் குறைந்ததாக இருக்கும் என்ற கருத்து தவறானது.

இந்த குளிர்காலத்தில் தீவிரம் குறைந்த ஓமிக்ரான், டெல்டாவை விட ஆதிக்கம் செலுத்தியதிலிருந்து, எதிர்காலத்தில் வரும் கொரோனா மாறுபாடுகள் தீவிரம் குறைந்ததாக இருக்கும் என்ற கோட்பாடு பரவலாக மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வருகிறது.

உதாரணமாக, டெல்டா மாறுபாட்டை விட புதிதாக உருவாகும் மாறுபாடு இன்னும் நோய்க்கிருமி கொண்டதாக மாறக்கூடும் என யங் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொரோனா வைரஸ் குறித்த உலக சுகாதார அமைப்பின் சிறப்புத் தூதர் டேவிட் நபாரோ கூறியதாவது, ஓமிக்ரானுக்குப் பிறகு அதிக மாறுபாடுகள் உருவாகும், மேலும் அவை தீவிரமாக பரவக்கூடியதாக இருந்தால் அவை ஆதிக்கம் செலுத்தும்.

அவை பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்தலாம், அவை மிகவும் ஆபத்தான அல்லது நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தலாம்.

கொரோனா முடிவுக்கு வருவதற்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. மக்களும் தலைவர்களும் இப்போது எடுக்கும் நடவடிக்கைகளின் மூலம் அதன் நீண்டகால தாக்கத்தை குறைக்கலாம் என டேவிட் நபாரோ தெரிவித்துள்ளார்.                           

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading