Local

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் நாளை முடிவு?

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது தொடர்பில் இறுதி முடிவு நாளை (14) எட்டப்படவுள்ளது என சிறிகொத்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்காக கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது தலைமைத்துவப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு கருஜயசூரிய, வஜிர அபேவர்தன மற்றும் ருவான் விஜேவர்தன ஆகிய மூவரில் ஒருவர் புதிய தலைவராக தெரிவுசெய்யப்படவுள்ளனர் எனவும் மேற்படி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பொதுத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர், ஐ.தே.க. தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் 74ஆவது ஆண்டு நிறைவு விழாவன்று புதிய தலைவரை பெயரிடுவதற்கு திட்டமிட்டிருந்தார். எனினும், கட்சி உறுப்பினர்களுக்கிடையில் ஒருமித்த நிலைப்பாடு காணப்படாததால் அது ஒத்திவைக்கப்பட்டது.

எனினும் தற்போது மூவர் மாத்திரமே போட்டியில் முன்னிலையில் இருப்பதாகவும், இவர்களில் ஒருவரை தலைவராக நியமிப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading