ஒரே நபர் மூலம் பிறந்த 67 குழந்தைகள்: பலருக்கு புற்றுநோய் என அதிர்ச்சி
ஐரோப்பாவில் ஒரே ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகளில், பலருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்தரித்த குழந்தைகளில் புற்றுநோய்
2008ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விந்தணு தானத்தின் மூலம் ஐரோப்பாவின் 8 நாடுகளில் 67 குழந்தைகள் பிறந்தன.
இரண்டு குடும்பங்கள் தங்கள் குழந்தைகளில் புற்றுநோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்ட பிறகு, தங்கள் கருவுறுதல் மருத்துவமனைகளைத் தொடர்பு கொண்டபோது தெரிய வந்தது.

சுமார் 46 குடும்பங்களைச் சேர்ந்த 67 குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டபோது, அவர்களில் 23 குழந்தைகளுக்கு இந்த மாறுபாடு கண்டறியப்பட்டது.
அரிய மாறுபாடு
இதன்மூலம் அரிய புற்றுநோய் அபாயம் உள்ள ஒரு ஆணின் விந்தணு பயன்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் 2008ஆம் ஆண்டு விந்தணு நன்கொடை அளிக்கப்பட்டபோது இந்த அரிய மாறுபாடு புற்றுநோயுடன் தொடர்புடையதாக தெரியவில்லை. மேலும் நிலையான ஸ்கிரீனிங் நுட்பங்களைப் பயன்படுத்தி அதைக் கண்டறிந்திருக்க முடியாது.
தானம் செய்தவரின் விந்தணுக்களில் சிலவற்றில் TP53 எனப்படும் மரபணு மாறுபாடு உள்ளது என விந்தணுவை வழங்கிய ஐரோப்பிய விந்து வங்கி உறுதிப்படுத்தியது.
அத்துடன் ஒரு தானம் செய்பவரின் விந்தணுவை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளை உருவாக்க மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற விந்து வங்கியின் விதி மீறப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட நபரின் விந்தணுக்களைப் பெற்ற அனைத்து மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You must be logged in to post a comment.