Local

காலாவதியான மருந்துகளால் 15 கோடி இழப்பு

மருந்துகளின் காலாவதி மற்றும் சேதம் காரணமாக 2022ஆம் ஆண்டிலும் அதற்கு முந்தைய ஆண்டிலும் (2021) அரச மருந்து சட்டக் கூட்டுத்தாபனத்திற்கு 15 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் சேதமடைந்த, காலாவதியான மருந்துகளின் மொத்த செலவு 34 கோடியை விடவும் அதிகம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில், காலாவதியான மற்றும் சேதமடைந்த மருந்துகளின் மொத்த விலை ஆறு கோடி எனவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கடந்த மற்றும் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டுகளில் தரம் குறைந்த மருந்துகளின் மொத்த செலவு மூன்று கோடியை விட அதிகரித்துள்ள நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையில் இரண்டு கோடியே முப்பத்தாறு இலட்சம் தொகை மீட்கப்படவில்லை என்றும் அறிக்கை கூறுகிறது.

தடுப்புப்பட்டியலில் உள்ள முப்பது கோடிக்கு மேலான வசூல் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக தணிக்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரச மருந்து ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading