Local

கொரோனாவுக்குப் பயந்து ஒரு வருடமாக மனைவி, குழந்தைகளை அடைத்து வைத்த கணவன்!

கலேவெல – பம்ரகஸ் வெவ பிரதேசத்தில் ஒரு வருட காலம் பெண் ஒருவரும் இரண்டு பிள்ளைகளும் சிறை வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

கோவிட் வைரஸ் தொற்றிற்கு அஞ்சி ஒரு வருடத்திற்கு அதிக காலம் இந்த மூவரும் வீட்டிற்குள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

கணவனாலேயே இவ்வாறு மனைவி மற்றும் பிள்ளைகள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக தான் மற்றும் பிள்ளைகள் கடுமையான மன அழுத்ததிற்குள்ளாகியுள்ளதாக மனைவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மக்குழுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் மனைவி முறைப்பாடு செய்துள்ளார் என தெரியவந்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading