கோட்டாபயவின் ரிட் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 இல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, தம்மை கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்து நிறைவு செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், இம்மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பான உத்தரவை செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

You must be logged in to post a comment.