சவுதி ரியாத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பலர் உயிரிழப்பு!
சவூதி ரியாத் நகரில் காலிதியாவில் பெட்ரோல் பங்க் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவைச்சேர்ந்த ஒரு தமிழர், ஒரு குஜராத்தி மற்றும் 4 மலையாளிகள் மரணம் எனவும் மேலும் பல வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மின்கசிவு காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இவர்கள் அனைவரும் புதியதாக வந்தவர்கள் எனவும், நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது. சமூக சேவகர்கள் மேலதிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
