Local

ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரித்தார் அலி சப்ரி!

புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சராக பதவியேற்க தான் தயாரில்லை என, முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், நேற்று கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதிக்கும்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது நிதியமைச்சைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி நிராகரித்துள்ளார்.

அத்துடன் தான் இந்த அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஆனால் நிதியமைச்சைப் பொறுப்பேற்க தயாரில்லை என்றும் இதன்போது தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading