Gossip

தந்தையின் கொடுமையால் தாய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த மகள்!

பெண் ஒருவர் தனது தாய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.

இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண் தனது உறவினர்கள் முன்னிலையில் தனது தாய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார். அந்த பெண்ணின் தந்தை அவரது தாயை பலமுறை அடித்து கொடுமை செய்து உள்ளார்.

இதனால் இருவரும் 15 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்ததாக அந்த பெண் கூறியுள்ளார். அப்பெண்ணுக்கு 16 வயதில் சகோதரன் இருக்கிறார்.

இருவரும் தற்போது புது தந்தையை வரவேற்க தயாராகி உள்ளனர். திருமணத்திற்காக தனது தாய் மெஹந்தி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தையும், அவர் மகிழ்ச்சியாக நடனமாடும் வீடியோவையும் பதிவிட்டு தனது தாய் இப்போது தான் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். பெற்றோர்களுக்கு குழந்தைகள் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் புது மணமக்களுக்கு பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading