Local

திருகோணமலை பகுதியில் நிலநடுக்கம்

திருகோணமலை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

திருகோணமலை மொறவெவ பிரதேசத்தில் இருந்து நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading