Cinema

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையா

பிரபல நடிகையொருவர் 40 வயதில் திருமணம் செய்யாமல் இரட்டை குழந்தைகளுக்கு தாயான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை பாவனா

தமிழ், தெலுங்கு, கன்னடம், பாலிவுட் படங்களில் பிரபலமாக நடித்து வருபவர் தான் நடிகை பாவனா.

இவர், கன்னட நடிகையாக இருந்தாலும் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான அன்புள்ள காதலுக்கு படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு கிளாசிக்கல் நடன கலைஞராகவும் இருக்கிறார்.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! | Bhavana Become Mother Of Twins Without Marriage

கடந்த 2023-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒட்ட என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாவனா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தற்போது 40 வயதாகும் பாவானாவிற்கு இதுவரையில் திருமணமாகவில்லை. ஆனால் இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அத்துடன் அந்த பதிவில் IVF முறையில் குழந்தையை பெற்றெடுக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

IVF முறையில் குழந்தை தரிப்பு

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! | Bhavana Become Mother Of Twins Without Marriage

மேலும், அந்த பதிவில், “நான் தாயாவேன் என ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. இது ஒரு புதிய அத்தியாயம். நான் ஒரு தாயாகப் போகிறேன். நான் இப்போது ஆறு மாத கர்ப்பமாக இருக்கிறேன். இரட்டையர்களைப் பெற்றெடுக்கும் உணர்வு என்னை மகிழ்ச்சியால் நிரப்புகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

40 வயதில் இருக்கும் பாவானாவிற்கு தாயாக வேண்டும் என்ற எண்ணம் வந்தபோது பல IVF கிளினிக்குகளைத் தொடர்பு கொண்டுள்ளார். இந்த வயதில் தாயாக மாறுவது கடினம் என கூறியுள்ளனர்.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! | Bhavana Become Mother Of Twins Without Marriage

இருந்தாலும், அவர் முயற்சியை கைவிடாது பெங்களூரில் ஒரு மருத்துவரைச் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்தார். மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றிய அவர் முதல் முயற்சியிலேயே கர்ப்பம் தரித்துள்ளார். இதற்கு பாவனாவின் குடும்பத்தினர் ஆதரவாக இருக்கிறார்கள்.

அத்துடன், “என்னுடைய குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் கலை, இசை, கலாச்சாரம் மற்றும் அன்பு நிறைந்த வீட்டில் வளர்வார்கள் என அவர் நம்புகிறார்” என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading