Local

தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நால்வரின் சடலங்கள் மீட்பு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து சிலாபம் – முன்னேஸ்வரத்திற்கு நேற்று (05) சுற்றுலா சென்றுள்ளனர்.

அவர்கள் சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் காணாமல் போயிருந்தனர்.

முன்னதாக காணாமல் போனவர்களில் ஒருவர் மாத்திரமே பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading