World

நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் என தெரியவில்லை.. டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நான் இன்னும் எவ்வளவு காலம் இருப்பேன் என தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தனது ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள Mar-a-Lago எஸ்டேட்டின் பாதுகாப்பு வளையத்தை மீறி நுழைய முயன்ற ஆயுதம் ஏந்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு

இந்த சம்பவத்துக்கு பதிலளிக்கும்போது, “என்னை குறிவைக்கும் பலர் இருக்கிறார்கள் அல்லவா? நான் எவ்வளவு நாள் இருப்பேன் என்று தெரியவில்லை,” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் என தெரியவில்லை.. டொனால்ட் ட்ரம்ப் | Donald Trump Security Scare

Mar-a-Lago வளாகத்துக்குள் நுழைய முயன்ற 21 வயதான ஆஸ்டின் டக்கர் மார்டின் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்க ரகசிய சேவை (U.S. Secret Service) அதிகாரிகள் அவரை துப்பாக்கிச் சூட்டில் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து எஃப்பிஐ, ரகசிய சேவை மற்றும் பாம் பீச் கவுண்டி ஷெரிஃப் அலுவலகம் விசாரணை நடத்தி வருகின்றன.

கொலை முயற்சிகள்

இந்த மாதிரி துப்பாக்கிதாரிகள் பற்றிப் படிக்கிறீர்கள். ஆனால் அவர்கள் முக்கியமான ஜனாதிபதிகளை மட்டுமே குறிவைக்கிறார்கள். முக்கியமற்ற ஜனாதிபதிகளை அவர்கள் குறிவைக்க மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.

நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் என தெரியவில்லை.. டொனால்ட் ட்ரம்ப் | Donald Trump Security Scare

அவர், கொலை செய்யப்பட்ட முன்னாள் அமெரிக்க அதிபர்களான Abraham Lincoln மற்றும் John F. Kennedy ஆகியோரை குறிப்பிட்டு, “அவர்கள் முக்கியமானவர்கள் தான்,” என்றார்.

ட்ரம்ப் மீது ஏற்கனவே இரண்டு முறை கொலை முயற்சிகள் நடந்துள்ள நிலையில், இந்த மூன்றாவது முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading