Local

நெல்லின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு!

நாட்டில் ஒரு கிலோ கிராம் நெல் 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உணவு தட்டுபாடு ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் நெல்லை சேமித்து வைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் இவ்வாறு விலை அதிகரிக்கபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் நெல்லை விநியோகிக்க மறுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் ஏனைய பகுதிகளில் உள்ள மக்கள் தனிப்பட்ட ரீதியில் நெல்கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading