நேபாளத்தில் 1000 ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை….
நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரப் பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள்ளது.
துண்டிக்கப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் சுரங்கங்களுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் 987 பேரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டவர்கள்
அத்தோடு 583 வெளிநாட்டவர்கள் உட்பட 3,916 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
இதனுடன் சீனா வெளியிட்டுள்ள தரவுகளின்படி 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 261 வெளிநாட்டவர்கள் உட்பட 546 பேர் காணாமல் போயுள்ளனர்.

இரு நாடுகளிலும் சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,003 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சுமார் 4,460 இற்கும் அதிகமானோர் இன்னமும் தேடப்பட்டு வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த 12 நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய சுமார் 900 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.
அவர்களுள் 500 இற்கும் மேற்பட்டோர் சேறும் சகதியும் நிறைந்த இருண்ட சுரங்கங்களுக்குள் மாட்டிக்கொண்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.
அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கி மீட்டெடுக்க இராணுவ மீட்புக் குழுக்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இமயமலைப் பகுதியில் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் ஏற்பட்ட பனிப்பாறை முறிவே இப் பேரழிவிற்குக் காரணம் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வீழ்ச்சி 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு நிகரான அதிர்வை ஏற்படுத்தியதுடன், பனி, பாறைகள் மற்றும் சேறு கலந்த வெள்ளப்பெருக்கு த்ரிசூலி ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதிகளை அடியோடு அழித்தது.
இதுவரை 11,814 க்கும் அதிகமானோர் ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உடல்களைப் பாதுகாப்பதற்காக 1,000 இற்கும் மேற்பட்ட ஃப்ரீஸர் பெட்டிகள் (Freezer units) மற்றும் டி.என்.ஏ (DNA) பரிசோதனை உபகரணங்களை நேபாள அரசு சர்வதேச சமூகத்திடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.