படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் விசேட அறிக்கை வெளியிடவுள்ள ரணில்
படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை (16) காலை விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.
சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (14) காலை படலந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்நிலையில், படலந்த ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள உண்மைகள் மற்றும் அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

You must be logged in to post a comment.