Up Country

பதுளையில் ஆசிரியர் தினம்

இலங்கை கல்வி சமூக சம்மேளனம் சர்வதேச ஆசிரியர் தினத்தை பதுளையில் நடாத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர்.  சங்கர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அந்தவகையில் விளையாட்டு போட்டிகள், இலக்கிய ரீதியான போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.
இந்நிகழ்வுகள் எதிர்வரும் 6.10.2018 சனிக்கிழமை நடைபெறவுள்ளதால் இம்மாதம் 30 திகதிக்கு முன்னர் ஆசிரியர்களை விண்ணப்பிக்குமாறும் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்பு 0714406393 கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading