World

பல ஆண்களின் விதைப்பைகளை அகற்றிய போலி மருத்துவருக்கு சிறை!

ஜேர்மனியில் 67 வயதாகும் எலக்ட்ரீஷியன் ஒருவர் ஏகப்பட்ட ஆண்களின் விதைப்பைகளை அகற்றியதற்காகவும், அதில் ஒருவர் கொல்லப்பட்ட குற்றத்திற்காகவும் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜேர்மனியின் முனிச் பிராந்திய நீதிமன்றம் அந்த நபருக்கு 8 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது.

தனியுரிமை காரணங்களுக்காக அவரது பெயர் வெளியிடப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர், 67 வயதாகும் எலக்ட்ரீஷியன் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் சாடோ-மசோசிஸ்டிக் வலைத்தளங்களில் “காஸ்ட்ரேஷன்” வழங்குவதை விசாரணையின் போது ஒப்புக்கொண்டார்.

மேலும் பல ஆண்கள் தங்களை சித்திரவதை செய்ததற்காகவும் அவர்களின் விந்தணுக்களை அகற்றுவதற்காகவும் பணம் கொடுத்ததாகக் கூறினார்.

நீதிமன்ற விசாரணையின் போது, ​​அந்த நபர் பாதிக்கப்பட்டவர்களிடம் தான் பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர் என்று கூறி ஏமாற்றியதாகவும், Markt Schwaben நகரில் உள்ள தனது சமையலறை மேசையில் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதாகவும் கூறினார்.

ஜூலை 2018 மற்றும் மார்ச் 2020-க்கு இடையில் 8 ஆண்களின் பிறப்புறுப்புகளை துண்டிதத்தாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் ஒருவரின் மரணத்திற்கான பொறுப்பை அவர் மறுத்தார்.

உயிரிழந்த அந்த நபர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து பல நாட்களுக்குப் பிறகு இறந்தார். மூன்று வாரங்களுக்குப் பிறகு ஒரு பெட்டியில் இறந்தவரின் உடலை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

மோசமான மற்றும் ஆபத்தான உடல் காயங்களை செய்ததற்காக 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குமாறு வழக்கறிஞர்கள் கோரினர்.

அவருக்கு ஏழு வருடங்களுக்கு மேல் தண்டனை வழங்கக்கூடாது என குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர்கள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading