பாகிஸ்தானிடம் இந்தியா இழந்த போர் விமானங்கள் எத்தனை? ராணுவத் தலைமை உறுதிப்படுத்திய தகவல்
ஆபரேஷன் சிந்தூரில் இந்திய போர் விமான இழப்புகள் குறித்து ராணுவத் தலைமை அதிகாரி வெளிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானுடன் அண்மையில் ஏற்பட்ட பதற்றமான நிலைமைக்குப் பின்னர், இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத தளங்களைத் தாக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தது.
இந்த தாக்குதலானது, ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது, இந்தியா எத்தனை போர் விமானங்களை இழந்தது என்பது குறித்து அரசு மௌனம் சாதித்தாலும், இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அனில் சோஹான், புளூம்பெர்க் தொலைக்காட்சியுக்கு அளித்த நேர்காணலில் இந்தியா சில விமானங்களை இழந்ததாக உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், பாகிஸ்தான் கூறும் 6 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறுவது “முற்றிலும் தவறானது” என அவர் மறுத்தார்.
“எத்தனை இழந்தோம் என்பது முக்கியமில்லை; ஏன் இழந்தோம், எந்த தவறுகள் நிகழ்ந்தன என்பதைக் கண்டறிந்து திருத்துவது தான் முக்கியம்” என அவர் கூறியுள்ளார்.
இந்த கருத்துக்கள் சிங்கப்பூரில் நடைபெற்ற Shangri-La பாதுகாப்பு மாநாட்டில் அவர் கலந்து கொண்டபோது வெளிவந்தன.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.

You must be logged in to post a comment.