Sports

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இலங்கை வருகை

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் மூன்று நாள் பயணமாக இன்று (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இலங்கையில் ஒரு விசேட திட்டத்தை செயல்படுத்த வந்ததாகவும், அது குறித்த விபரங்களை பின்னர் வெளியிடுவேன் என்று நம்புவதாகவும் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு ஜொன்டி ரோட்ஸ் தெரிவித்தார்.

இன்று காலை 5.25 மணிக்கு இந்தியாவின் மும்பையிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL-148) மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஜொன்டி ரோட்ஸ்க்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading